ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கையில் வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் பல்வேறு வரிகளை உயர்த்த அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

News image
ரணில் விக்ரமசிங்க
Updated On :31 மே 2022, 10:43 am

DIN

இலங்கையில் பல்வேறு வரிகளை உயர்த்த அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடுமையாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்வதால், புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன்படி, கடந்த வாரத்தில் பெட்ரொல், டீசலின் விலையை கடுமையாக உயர்த்தி உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, பிரதமர் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை ஏற்று தொலைதொடர்பு, பந்தயம், கேமிங், மதிப்புக் கூட்டு வரிகளை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.