சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில், ஆடை உற்பத்தியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 போ் பலியாகினா்.
இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அன்யாங் நகரில் அமைந்துள்ள ஆயத்த ஆடை ஆலையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படையினா் 4 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இந்த விபத்தில் 38 போ் பலியாகினா்; 2 போ் காயமடைந்தனா்.
பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும். வெல்டிங் பணியின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொதியில் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.