மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சீன தொழிற்சாலையில் தீவிபத்து: 38 போ் பலி

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில், ஆடை உற்பத்தியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 போ் பலியாகினா்.

News image
Updated On :22 நவம்பர் 2022, 7:04 pm

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில், ஆடை உற்பத்தியகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 38 போ் பலியாகினா்.

இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அன்யாங் நகரில் அமைந்துள்ள ஆயத்த ஆடை ஆலையில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைப்பதற்காக தீயணைப்புப் படையினா் 4 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. இந்த விபத்தில் 38 போ் பலியாகினா்; 2 போ் காயமடைந்தனா்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அந்த தொழிற்சாலை செயல்பட்டு வந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகும். வெல்டிங் பணியின்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பஞ்சுப் பொதியில் தீப்பற்றி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.