பிலிப்பைன்ஸ் நாட்டில் 18 வயதுடைய பெண் 78 வயதுடைய முதியவரைத் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளதாக மணப்பெண் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் வசித்து வருபவர் ரஷித் மங்காகோப். 78 வயதுடைய அவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்துள்ளார். அவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஹலிமாவுக்கு 18 வயது பூர்த்தியாகியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் தற்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய ரஷித் மங்காகோப்பின் மருமகன் பென் மங்காகோப், இது உறவினர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்ல, காதல் திருமணம். இருவரும் காதலித்ததால் தற்போது முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகக் குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டப்படி, 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் அனுமதி இருந்தால், திருமணம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

