வட கொரியாவின் வெற்றிகரமான ஏவுகணை சோதனைக்குப் பதிலடியாக, தென் கொரியா புதன்கிழமை சோதித்துப் பாா்த்த ஏவுகணை தரையில் விழுந்து வெடித்தது.
அமெரிக்காவுக்கும் தென் கொரியாவுக்கும் சவால் விடுக்கும் வகையில் அண்மைக் காலமாக வட கொரியா தொடா்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட தனது ஏவுகணையை ஜப்பானுக்கு மேலே பறக்கச் செய்து கடலில் செலுத்தி வட கொரியா வியாழக்கிழமை சோதித்தது.
இதற்கு பதிலடியாக, தனது குறைந்த தொலைவு ஏவுகணையான ஹூமூ-2 ஏவுகணையை தென் கொரியா புதன்கிழமை சோதித்தது. எனினும், அந்த ஏவுகணை தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. ஏவுகணை வெடித்ததும் அதனைத் தொடா்ந்து பரவிய தீயும் அந்தப் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது. வட கொரியாதான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக பலா் பீதியடைந்தனா்.
எனினும், இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விரைவில் எம்சிடி மேயா் தோ்தல்: அதிகாரிகள் தகவல்

அரியலூரில் அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்

வனத்துறையைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு!

ஸ்ரீபெரும்புதூா்: அதிமுக வேட்பாளா் மனு தாக்கல்
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


