இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

மனிதர்களை மிஞ்சிய ரோபோக்கள்: 'ஃப்ரெஞ்ச் ஃப்ரை' செய்து அசத்தல்!

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஆட்டோமேஷன் நிறுவனம், ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்யும் செயல்முறையை தானியங்கி ரோபோக்கள் மூலம் மனிதர்களை விட வேகமாகவும், சிறப்பாகவும் செய்கிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:00 pm IST

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு  நிறுவனம், ஃப்ரெஞ்ச் ஃப்ரை செய்யும் செயல்முறையை தானியங்கி ரோபோக்கள் மூலம் உருவாக்கி உள்ளது. இந்த ரோபோக்கள் மனிதர்களை விட வேகமாகவும், சிறப்பாகவும் செய்கிறது.

பசடேனாவில் உள்ள Miso Robotics Inc சமீபத்தில் Flippy 2 ரோபோவை வெளியிட்டது. இது துரித உணவான ஃப்ரெஞ்ச் ஃப்ரை மற்றும் ஆனியன் ரிங் போன்றவற்றை எளிதாக செய்ய  இந்த ரோபோ உதவுகிறது. ஃப்ரெஞ்ச் ஃப்ரை, ஆனியன் ரிங் மற்றும் மற்றும் பிற உணவு பொருள்களின் செயல் முறைகளை இந்த ரோபோக்கள் மூலம் தானியங்குபடுத்துகின்றன.

கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட ரோபோவானது, உறைந்த ஃப்ரெஞ்ச் ஃப்ரையை குளிர்சாதனப் பெட்டி ஃப்ரீசரில் இருந்து எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்து, பின்னர் பரிமாறத் தயாராக இருக்குமாறு ஒரு தட்டில் வைக்கிறது.

Miso Robotics இன் கூற்றுப்படி, Flippy 2 ஒரே நேரத்தில் பல்வேறு சமையல் குறிப்புகளின் அடிப்படையில் பல உணவுகளை சமைக்க முடியும். இது உணவக ஊழியர்களின் தேவையை குறைக்கிறது மற்றும் டெலிவெரியை விரைவுபடுத்துகிறது.

இந்த கடந்த ஐந்து ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்தது. சமீபத்தில் வணிக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மிசோ தலைமை அதிகாரி பெல் கூறுகையில், இந்த ரோபோக்கள் மனிதர்களின் வேலையை பறிப்பதன் காரணமாக விளம்பரப்படுத்தத் தயக்கம் இருப்பதாக கூறினார். மேலும், மனிதர்கள் ஃப்ரை ஸ்டேஷன் பணிகளை செய்வதை விட  மற்ற பணிகள் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பெல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.