கிரீஸ் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய அளவிலான சேதங்கள் குறித்த உடனடி தகவல் இல்லை.
மத்திய கிரீஸில் கோரிந்த் வளைகுடாவில் கடல் மட்டத்துக்கு அடியில் 12.7 கிமீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சுமாா் 15 விநாடிகள் நீடித்த இந்த நிலநடுக்கத்தை பல இடங்களில் உணர முடிந்தது. இதனால் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.