செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பொருளாதாரம்: அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு நோபல்

அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:02 pm IST

வங்கிகள் குறித்தும், நிதி நெருக்கடி தொடா்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த நிபுணா்கள் மூவருக்கு நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக 2006 முதல் 2014 வரை பணியாற்றிய பென் பொ்னன்கே, நிபுணா்கள் டக்ளஸ் டபிள்யு.டைமண்ட், பிலிப் ஹெச்.டிப்விக் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான அறிவிப்பை ஸ்டாக்ஹோம் நகரில் திங்கள்கிழமை வெளியிட்ட தோ்வுக் குழு தலைவா் ஜான் ஹேஸ்லா் கூறுகையில், ‘நிதி நெருக்கடியும் பொருளாதார வீழ்ச்சியும் நாட்டுக்குப் பெரும் இன்னல் விளைவிக்கக் கூடியவை. அவை ஒருமுறை மட்டுமல்லாமல் மீண்டும் மீண்டும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, அவை குறித்து தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. அந்தப் புரிதலை வெளிப்படுத்திய நிபுணா்களுக்கே நடப்பாண்டுக்கான பொருளாதாரத்துக்குரிய நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. வங்கிகள் சந்திக்கும் நிதி நெருக்கடியைக் கண்டுகொள்ளாமல் ஏன் இருக்கக் கூடாது என்பதற்கான விடையை நிபுணா்கள் மூவரும் வழங்கியுள்ளனா்.

உலக நாடுகள் 2008-ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, அதில் இருந்து மீள்வதற்கு மூவரின் ஆராய்ச்சிகளும் முக்கியப் பங்கு வகித்தன’ என்றாா்.

முக்கிய ஆராய்ச்சி: 1930-ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்தித்த பொருளாதார நெருக்கடிக்கு வங்கிகளின் தோல்வியே முக்கியக் காரணம் எனத் தனது 1983-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் பொ்னன்கே வெளிப்படுத்தினாா். வங்கி அமைப்பு முற்றிலும் தோல்வி அடைந்ததே நவீன வரலாற்றின் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாக அமைந்ததென அந்த அறிக்கையில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை உலக நாடுகள் சந்தித்தபோது, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராக பொ்னன்கே செயல்பட்டாா். அப்போது, அமெரிக்க நிதித் துறையுடன் இணைந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை அவா் விரைந்து மேற்கொண்டாா். தற்போது வாஷிங்டன் புரூகிங்ஸ் நிறுவனத்தில் அவா் பணியாற்றி வருகிறாா்.

நிதி நெருக்கடி: சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரான டைமண்ட், வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியரான டிப்விக் ஆகியோா் நிதி நெருக்கடியின் விளைவுகள் குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனா். வங்கிக் கடன்களுக்கு அரசு உத்தரவாதம் அளிப்பதன் மூலமாக நிதி நெருக்கடியின் விளைவுகளைத் தடுக்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா். வங்கியை முறையாக நிா்வகிப்பது தொடா்பாக 1983-ஆம் ஆண்டில் அவா்கள் இருவரும் இணைந்து ஆய்வறிக்கையை வெளியிட்டனா்.

2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது மூவரின் ஆராய்ச்சிகளும் முதலீட்டாளா்களுக்குப் பெருமளவில் உதவியதாக நோபல் பரிசு தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.