மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பயணிகளுடன் பறந்த முதல் ‘பறக்கும் கார்’: துபையில் அறிமுகம்!

துபையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் காரின் சோதனை வெற்றி பெற்றது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 7:13 am

DIN

துபையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பறக்கும் காரின் சோதனை வெற்றி பெற்றது. விரைவில் இந்த பறக்கும் கார் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது.

சீனாவின் மின்சார வாகன தொழில்நுட்ப நிறுவனமான ‘எக்ஸ்பெங்’ இந்த பறக்கும் காரை கண்டுபிடித்துள்ளது. இரண்டு பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரின் பெயர் ‘எக்ஸ் 2’.

Story image

அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் 130 கீ.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த கார், 760 எடையுடன் பறக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபை நகரில் கடந்த திங்கள்கிழமை அன்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. ’எக்ஸ்2’ உலகின் முதல் பறக்கும் கார் இல்லை என்றாலும், முதல்முறையாக பொதுமக்களை சுமந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story image

இந்த கார் குறித்து எக்ஸ்பெங் நிறுவனம் கூறுகையில், ‘எக்ஸ் 2’ காரை முதலில் துபையில் அறிமுகப்படுத்தவுள்ளோம். மெல்ல மெல்ல சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் சந்தைகளில் விற்பனைக்கு வரவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.