ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தானில் 2 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சித் தகவல்

பாகிஸ்தானில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 8:19 am

DIN

பாகிஸ்தானில் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் சமா தொலைக்காட்சியின் புலனாய்வுப் பிரிவினர் பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வை மேற்கொண்டனர்.

முடிவில், பாகிஸ்தானில் கடந்த 2017 ஆம் ஆண்டு 3,327 பெண்களும் 2018-ல் 4,456 பேரும் 2019-ல் 4,573 பெண்களும் 2020 ஆம் ஆண்டு  4,478 மற்றும்  2021-ல்  5,169 பெண்கள் என கடந்த 4 ஆண்டுகளில் 21,900 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, ஒரு நாளுக்கு சராசரியாக 12 பெண்கள் என ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். 

2022-ல் மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 4 மாதங்களில் மட்டும் இதுவரை 305 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரம் குடும்பம் மற்றும் தன்மானத்திற்கு பயந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகாரளிக்காமல் இருக்கும் பெண்களும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 1,957 ஆணவக் கொலைகளும் நடந்துள்ளன. 

இந்தாண்டு பாகிஸ்தானின் 44 நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக 1,301 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. காவல்துறையினர் 2,856 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், 4 சதவீத வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு வந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

2020-ல் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், நீதிமன்றங்களில் பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்ட 75 நாடுகளில்  பாகிஸ்தான் முதலிடத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.