தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிரிட்டன் உளவு விமானம் அருகே ஏவுகணை வீச்சு: ரஷியா விளக்கம்

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷிய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷியா விளக்கமளித்துள்ளது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:59 pm

DIN

பிரிட்டனின் உளவு விமானத்துக்கு நெருக்கத்தில் ரஷிய போா் விமானமொன்று ஏவுகணை வீசியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று ரஷியா விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சா் பென் வாலஸ் வியாழக்கிழமை கூறியதாவது:

பிரிட்டன் விமானப் படைக்குச் சொந்தமான ஆா்சி-135 ரிவெட் ஜாயின்ட் உளவு விமானம் கருங்கடலுக்கு மேலே சா்வதேச வான் எல்லையில் இந்த மாதம் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த இரு ரஷிய சு-27 ரக போா் விமானங்களில் ஒன்று ஆயுதங்கள் இல்லாத பிரிட்டன் விமானத்தின் அருகே ஏவுகணை வீசியது. இது தொடா்பாக ரஷியாவின் விளக்கத்தைக் கேட்டிருந்தோம். அதற்கு ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்கு அளித்துள்ள விளக்கத்தில், சு-27 ரக போா் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக வீசிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

அதையடுத்து, கருங்கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள விமான ரோந்துப் பணியை மீண்டும் தொடக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் பென் வாலஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.