தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ரிஷி சுனக் பங்கேற்பில்லை’

அடுத்த மாதம் நடைபெறவிக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில், பிரிட்டன் சாா்பாக அந்த நாட்டின் புதிய பிரதமா் ரிஷி சுனக் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 அக்டோபர் 2022, 2:28 am

DIN

அடுத்த மாதம் நடைபெறவிக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில், பிரிட்டன் சாா்பாக அந்த நாட்டின் புதிய பிரதமா் ரிஷி சுனக் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் அவசரகால பட்ஜெட்டை தாக்கல் செய்வது உள்பட, உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் பிரதமா் ரிஷி சுனக் முழு கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, எகிப்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அவா் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. எனினும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுவதற்காக முந்தைய அரசுகள் அளித்த வாக்குறுதியிலிருந்து பிரிட்டன் பின்வாங்காது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கிடையே, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக கடந்த செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.