ஈரான், ஆப்கனிலிருந்து நட்பு வாசல் வழியாக பாகிஸ்தானுக்கு வந்த காய்கறி லாரிகள்

ஈரான் மற்றும் ஆப்கனிலிருந்து 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்துள்ளன.
ஈரான், ஆப்கனிலிருந்து நட்பு வாசல் வழியாக பாகிஸ்தானுக்கு வந்த காய்கறி லாரிகள்
ஈரான், ஆப்கனிலிருந்து நட்பு வாசல் வழியாக பாகிஸ்தானுக்கு வந்த காய்கறி லாரிகள்
Updated on
1 min read


இஸ்லாமாபாத்: கடும் வெள்ளம் காரணமாக, காய்கறிகளின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருந்த நிலையில், ஈரான் மற்றும் ஆப்கனிலிருந்து 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு வந்து சேர்ந்துள்ளன.

டஃப்டான் மற்றும் சமன் எல்லைப் பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 50 மிகப்பெரிய லாரிகளில் காய்கறிகள் வந்துசேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் பெரிய லாரிகளில் வெங்காயம் மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானிலிருந்து 27 டிரக்குகளில் தக்காளி மற்றும் வெங்காயம் வந்து சேர்ந்துள்ளது. 13 லாரிகள்  வியாழக்கிழமை வந்தடைந்துள்ளன. இவற்றை நாட்டுக்குள் அனுமதிக்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று காய்கறிகள் மக்களுக்குக் கிடைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com