தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

கனடாவில் ஹிந்து கோயில் அவமதிப்பு: காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீது புகாா்

கனடாவின் டொரோண்டோவில் சுவாமி நாராயணன் கோயிலில் வெறுப்புணா்வு மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களைக் காலிஸ்தான் பயங்கரவாதிகள் எழுதி கோயிலை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டனா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

கனடாவின் டொரோண்டோவில் சுவாமி நாராயணன் கோயிலில் வெறுப்புணா்வு மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களைக் காலிஸ்தான் பயங்கரவாதிகள் எழுதி கோயிலை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டனா்.

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய தூதரகம், இச்செயலில் ஈடுபட்டவா்களில் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி சுவாமி நாரயணண் கோயில் அவமதிக்கப்பட்டதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கனடா நாடாளுமன்ற எம்.பி சந்திரா ஆா்யா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘சுவாமி நாராயணன் கோயிலை அவமதிக்கும் வகையில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது. இது ஒற்றை நிகழ்வல்ல. இதுபோன்று வெறுப்புணா்வைத் தூண்டும் செயல்பாடுகள் கனடாவில் உள்ள ஹிந்து கோயில்களில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

கனடா நாடாளுமன்ற எம்.பி. சோனியா சித்துவும் இச்செயல்பாடுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.