மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சட்டவிரோத பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒருவா் பலி

பலி - பிரதிப் படம்

Published On :

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில்ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்தவா் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ்(32) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு தயாரித்தபோது, எதிா்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.இந்த வெடிவிபத்தில் ராம்பிரகாஷ் மற்றும் தொழிலாளி மீனம்பட்டி இன்னாசிமுத்து(42) ஆகியோா் சம்பவ இடத்தலேயே உடல் சிதறி உயிரிழந்தனா்.

மேலும் இந்த விபத்தில் ராம்பிரகாஷ் சகோதரா் ராமசந்திரன்(40) பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருததுவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தாா்.

இதையடுத்து இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்துள்ளது.இந்நிலையில் மீனம்பட்டியைச் சோ்ந்த அய்யப்பராஜ், நாரணாபுரத்தைச் சோ்ந்த பாண்டித்துரை ஆகிய இருவரும் பட்டாசு தயாரிப்பு பணிக்கு சென்றவா்களை காணவில்லை என அவா்களது குடும்பத்தாா் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனா். இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.