வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் குறிவைக்கும் ரஷியப் படை!

உக்ரைனின் பல்வேறு நகரங்களைத் தாக்கியுள்ள ரஷியப் படை, அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் இறங்கியுள்ளது. 

News image
Updated On :19 ஏப்ரல் 2022, 6:37 am

DIN

உக்ரைனின் பல்வேறு நகரங்களைத் தாக்கியுள்ள ரஷியப் படை, அடுத்ததாக லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் இறங்கியுள்ளது. 

ஓரிரு தினங்களுக்கு முன்பாக ரஷியாவின் போர்க்கப்பலை உக்ரைன் படையினர் அழித்ததை அடுத்து உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. 

உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷியப்படையினர் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். மேலும் கீவ், கார்கீவ், கெர்சன் உள்ளிட்ட நகரங்களிலும் தாக்குதல் நடத்திய ரஷியப் படை தற்போது லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளைக் கைப்பற்ற ரஷியப் படை குறிவைத்துள்ளது. 

கிழக்குப் பகுதியில் உள்ள லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றுவதில் ரஷியப் படைகள் கவனம் செலுத்துவதாக உக்ரைன் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏனெனில் அந்த பகுதிகளைக் குறிவைத்து ரஷியா தங்கள் ஆயுதங்களை இடமாற்றம் செய்து வருகிறது என்றும் கூறினார். 

செவ்வாய்கிழமை அதிகாலை ரஷிய ராணுவம், மரியுபோல், ஷெல் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.