கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தொடரும் பணவீக்கம்: உயரும் வட்டி விகிதங்களால் பிரிட்டன் மக்கள் அவதி

பிரிட்டனில் பணவீக்கத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 5:54 pm IST

பிரிட்டனில் பணவீக்கத்தின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனிநபர் கடன்களின் வட்டி விகிதமும் உயர்ந்து வருகிறது.

பிரிட்டனில் வாகன எரிவாயு மற்றும் உணவுப் பொருள்களின் விலையேற்றம் சில்லறைப் பணவீக்கத்தின் விகிதத்தை அதிகரிக்கச் செய்ததால் வங்கிகளில் பெற்ற கடன்களின் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன.

அந்நாட்டில் நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் மே மாதத்தில் 9.1 சதவீதத்திலிருந்து ஜூன் மாதம் 9.4 சதவீதமாக உயர்ந்திருந்த நிலையில் ஜூலை மாதமும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

இதனால், கடந்த நிதியாண்டு முடிவில் (ஏப்ரலில்) 1.25% ஆக இருந்த தனிநபர் வங்கிக்கடன்களின் மீதான வட்டி விகிதம்  தற்போது 0.5% அதிகரிக்கப்பட்டு 1.75% ஆக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கிடையே, சில்லறைப் பணவீக்கம் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத புதிய பணவீக்க உயர்வு என்றும் அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 13.3 சதவீதமாக உயரும் என பாங்க் ஆஃப் இங்கிலாந்து எச்சரித்துள்ளது. 

மேலும், நிதி நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் செய்தி நிறுவனங்கள் இன்று ‘கருப்பு வியாழன்’ எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

பணவீக்கத்திற்கு என்ன காரணம்?

பிரிட்டனில் அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ரஷியாவும் மறைமுகக் காரணமாக இருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் அதனைக் கண்டித்த பிரிட்டன் ரஷியாவுக்கு சில பொருளாதார தடைகளையும்  விதித்தது.

அதனைத் தொடர்ந்து, எரிவாயு போன்ற முக்கிய எரிபொருள்களை பிரிட்டனுக்கு அனுப்புவதை ரஷியா நிறுத்தியது. இதனால், ஏற்பட்ட பற்றாக்குறையே அவற்றின் விலையேற்றத்துக்குக் காரணம் என்றும் மேலும், இதே நிலைதொடர்ந்தால் 2024 ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்தில் 5-ல் ஒரு குடும்பத்தினர் சேமிப்பை இழப்பார்கள் என்றும்  பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.