தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை வெடித்துச் சிதறியது

பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை (அக்வேரியம்) வெடித்துச் சிதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :17 டிசம்பர் 2022, 5:57 pm IST


பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரிய நீர்வாழ் காட்சிசாலை (அக்வேரியம்) வெடித்துச் சிதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த 52 அடி உயரமுள்ள உருளையான நீர்வாழ் காட்சிசாலையில் 1500க்கும் அதிகமான அதிசய மீன்கள் பராமரிக்கப்பட்டு வந்தன.

அந்நாட்டு நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில், இது எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதால், அந்த அக்வேரியம் அமைக்கப்பட்டிருந்த கட்டடம் ஒட்டுமொத்தமாக சேதமடைந்தது. இந்த கட்டடத்தில் ஏராளமான உணவகங்கள், பொழுதுபோக்கு அமைப்புகள், கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பாதிக்கப்பட்டன. அக்வேரியத்துக்குள் நிரப்பப்பட்டிருந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கட்டடத்திலிருந்து வெளியேறி சாலை முழுவதும் ஆறாக ஓடியது. அதிலிருந்த 1500 மீன்களும் இறந்துவிட்டன. 

அதிர்ஷ்டவமாக இந்த அக்வேரியம் காலை 6 மணிக்கு வெடித்துச் சிதறியது. இதனால் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு வேளை ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வெடித்திருந்தால் கூட, கட்டடம் மற்றும் சாலையில் மக்கள் கூட்டம் இருந்திருக்கும் பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.

உடனடியாக கட்டப் பகுதியில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த விடுதிகளிலிருந்து 300 விருந்தினர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நீர்வாழ் காட்சிசாலைதான் உலகிலேயே, உருளையாக அமைக்கப்பட்டமிகப்பெரிய அக்வேரியமாக அறியப்பட்டு வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.