

கனடாவிலுள்ள ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தின் சுமாா் 1.36 கோடி கரோனா தடுப்பூசிகளைத் தூக்கிவீச அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அந்த மருந்துகளைப் பெற்றுக்கொள்ள உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் யாரும் முன்வராததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2 கோடி தடுப்பூசிகளைப் பெறுவதற்காக அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்துடன் கனடா அரசு கடந்த 2020-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது. எனினும், அந்தத் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டால் ரத்தக்கட்டு மரணம் நிகழக்கூடும் என்று அச்சத்தால், மற்ற நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகளின் மீது அரசு கவனம் செலுத்தியது. இதனால், அஸ்ட்ராஸெனெகா நிறுவன தடுப்பூசிகள் தேக்கமடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.