போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

இலங்கை பிரதமர் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்

அதிபர் மாளிகையைத் தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News image
இலங்கை பிரதமர் வீட்டுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்
Updated On :9 ஜூலை 2022, 12:38 pm

DIN


கொழும்பு: அதிபர் மாளிகையைத் தொடர்ந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்குள்ளும் போராட்டக்காரர்கள் புகுந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகிவரும் நிலையில், இன்று அதிபர் கோத்தபயவுக்கு எதிரான மக்கள் புரட்சி வெடித்தது.

கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை ஆயிரக்கணக்கானோர் முற்றுகையிட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தடுக்க முயன்ற ராணுவத்தினரின் முயற்சி வீணானது. பாதுகாப்புக் கருதி, அதிபர் கோத்தபய ராஜபட்ச அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறி, ராணுவ தலைமையகத்துக்குள் தஞ்சம் புகுந்தார்.

இதையடுத்து, இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் அவரது வீட்டுக்குள்ளும் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.