இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். 
இலங்கையின் இடைக்கால அதிபராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். 

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன. 

மக்களின் எதிர்ப்பை அடுத்து, இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச மாலத்தீவிற்கு தப்பியோடினார். மேலும் அவர் பதவி விலகியதை அடுத்து, அங்கிருந்தவாறே பிரதமா் ரணில் விக்ரமசிங்கவை நாட்டின் இடைக்கால அதிபராக நியமித்தாா்.

அதன்படி,  இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை தலைமை நீதிபதி முன்பாக அவர் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். 

மேலும் இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய வருகிற 20 ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், இலங்கை அதிபராக ரணில் பதவியேற்புக்கு அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com