கீவ்: உக்ரைனின் டோரிட்ஸ் நகரில் திங்கள்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நிகழ்த்திவரும் நிலையில், இன்று காலை முதல் டோரிட்ஸ் நகரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்கலாம்: இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி! ஒரு டாலர் ரூ.79.98
இந்த தாக்குதலில் நகரில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. கட்டடத்தில் இருந்த மக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில், ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மூவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த கட்டடத்தில் இதுவரை 6 பேர் கொல்லப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.