சீனா சொந்தமாக நிறுவி வரும் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இணைப்பதற்கான முதல் ஆய்வகக் கலத்தை அந்த நாடு வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.
பிரம்மாண்டமான லாங் மாா்ச்-5பி ஒய்3 ராக்கெட் மூலம் ‘வென்டியன்’ என்ற பெயரிடப்பட்டுள்ள அந்த ஆய்வுக் கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தியாங்காங் விண்வெளி நிலையத்தின் மையக் கலமான தியான்ஹேவுக்கு இடா்கால மாற்றாகவும் மற்ற நேரங்களில் சக்திவாய்ந்த ஆய்வகமாகவும் வென்டியன் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் தியான்ஹே மையக் கலம் முதல்முறையாக விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையம் இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படத் தொடங்கும்.