

தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தென்கொரியாவில் தற்போது அதிபர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வெற்றி
ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபோ கிஷி வெளியிட்டுள்ள தகவலின்படி 300 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் வகையிலான பாலிஸ்டிக் வகை ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும் இதுதொடர்பாக தகவலை சனிக்கிழமை வரை வடகொரியா உறுதிப்படுத்தவில்லை.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.