மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சூடானில் தீவிரமாகும் பொருளாதார நெருக்கடி: எச்சரிக்கும் ஐநா

சூடானில் நிலவிவரும் கடும்பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2022, 6:29 pm IST

சூடானில் நிலவிவரும் கடும்பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.

சூடானில் நிலவிவரும் வறுமை நிலை குறித்த அறிக்கையை உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டன. அதில் இன்னும் சில மாதங்களில் அந்நாட்டில் வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத நாட்டின் உணவு தானிய உற்பத்தியானது கடந்த ஆண்டைக் காட்டிலும்  மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உணவுப் பொருள்களின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் உணவு தானிய உற்பத்தியில் ஏற்படும் பற்றாக்குறை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 30 சூடான் பவுண்டுகளாக இருந்த ஒரு ரொட்டியின் விலை தற்போது 50 சூடான் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 50 கிலோ சர்க்கரை மூட்டை 18,000 லிருந்து 30,000 சூடான் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. நவம்பரில் 320 சூடான் பவுண்டுகளாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இந்த வாரம் 672 சூடான் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் தவித்துவரும் சூடான், உக்ரைன் ரஷிய போர் காரணமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. நாட்டின் கோதுமை தேவையில் 50 சதவிகிதத்தை ரஷியாவை சூடான் நம்பியுள்ளதால் நாளுக்குநாள் நெருக்கடிகள் தீவிரமாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.