புதுதில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 26, 27-ல் உத்தரகண்ட் பயணம் மேற்கொள்வார் என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27 ஆம் தேதி, ஹரித்வாரில் திவ்ய பிரேம் சேவா மிஷனின் வெள்ளி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.