குஜராத்தின் துவாரகா பகுதியில் இன்று நண்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துவாரகா கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் இது ரிக்டா் அளவுகோலில் 5.3 அலகுகளாக பதிவானதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச்-19ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்தடுத்து 2 இரண்டு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.