இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா். தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.
இதனால், உருவான வன்முறைகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் சிலர் பலியாகினர்.
இதையும் படிக்க: ‘இலங்கைக்கு படை அனுப்பப்படாது’: மத்திய அரசு உறுதி
அதன் பின், கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, இன்று இலங்கைக்கு ஆதரவாக இந்தியா படைகளை அனுப்பாது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக பெட்ரோலியம் கார்பரேஷன் அறிவித்துள்ளது.