மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தைவான் கொள்கையில் மாற்றம் இல்லை: ஜோ பைடன்

தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

News image

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Updated On :25 மே 2022, 1:38 am IST

டோக்கியோ: தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.

‘க்வாட்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஜப்பான் சென்றுள்ளாா். டோக்கியோவில் அவா் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்தபோது ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், தைவானை படைபலத்தின் மூலம் சீனா கைப்பற்ற முயன்றால், அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும் என்றாா்.

‘ஒரே சீனா கொள்கையின்படி’ தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறிவரும் நிலையில், அமெரிக்க அதிபா் இவ்வாறு கூறியதால், தைவான் மீதான கொள்கையை அமெரிக்கா மாற்றிக்கொண்டதா எனக் கேள்வி எழுந்தது.

இந்நிலையில், டோக்கியோவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய ஜோ பைடன், தைவான் மீதான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை. நேற்று பேசியபோதே இதுகுறித்து குறிப்பிட்டேன். ஒரே சீனா கொள்கைக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். அதற்காக, சீனா தனது பலத்தைப் பயன்படுத்தி தைவானைக் கைப்பற்றுவதற்கு அதிகாரம் உள்ளது என்பது அதன் பொருள் அல்ல என்றாா்.

தைவானுடன் பரஸ்பரம் பாதுகாப்பு ஒப்பந்தம் எதையும் அமெரிக்கா செய்துகொள்ளாத நிலையில், தைவானுக்கு இதுபோன்று பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதை தவிா்த்து வந்தது. ஆனால், முதல்முறையாக தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா ராணுவரீதியாகத் தலையிடும் என அதிபா் பைடன் கூறியதற்கு சீனா கடுமையான ஆட்சேபம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.