இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு: இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு 

அமைதிக்கான நோபல் பரிசு நடப்பாண்டு இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஷுபைர் மற்றும் ப்ரதிக் சின்ஹாவிற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

Published On :1 பிப்ரவரி 2024, 4:00 pm IST

அமைதிக்கான நோபல் பரிசு நடப்பாண்டு இந்திய பத்திரிகையாளர்கள் முகமது ஷுபைர் மற்றும் ப்ரதிக் சின்ஹாவிற்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

ஏற்கெனவே மருத்துவம், வேதியியல். இயற்பியல் மற்றும் இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பிற்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த இரு பத்திரிகையாளர்களின் பெயர்கள் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளதாக பிரபல டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

தனியார் இணையப் பத்திரிகையின் செய்தியாளர்களான முகமது ஷுபைர் மற்றும் ப்ரதிக் சின்ஹா ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் நிலவும் மதரீதியிலான தாக்குதலுக்கு பயன்படும் பொய் செய்திகளை களைவதற்காக இரு பத்திரிகையாளர்களுக்கும் நோபல் வழங்கப்படலாம் என டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 2017ஆம் ஆண்டிலிருந்து வெளியாகும் பொய் தகவல்களுக்கு எதிராக உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வரும் முகமது ஷுபைர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாகக் கூறி மத்திய அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களைத் தவிர உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐநா அகதிகள் முகமை, உலக சுகாதார நிறுவனம்,காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டக்காரர் கிரெட்டா துன்பெர்க், போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.