மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

News image

கோப்புப்படம்

Updated On :6 அக்டோபர் 2022, 5:57 pm IST

வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. 

வடகொரியா நாடானது அவ்வப்போது மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தென்கொரியாவில் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து அந்நாடு மேற்கொண்டு வரும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த சில தினங்களாக வடகொரியா தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டது. 

கடந்த சனிக்கிழமை 2 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதித்த வடகொரியாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது ரயில் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் மக்களை பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தியது.

இந்நிலையில் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை 6 மணியளவில் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக ஜப்பான் மற்றும் தென்கொரியா அறிவித்துள்ளன. 

350 கி.மீ தூரம் சென்று தாக்கும் வகையிலான ஏவுகணையும், 800 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையும் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2 வாரங்களில் வடகொரியா மேற்கொண்ட 6ஆவது ஏவுகணை சோதனை இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.