நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜாம்பியா சுரங்கத்தில் புதைந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்?

ஜாம்பியாவில் ஏற்பட்ட தாமிரச் சுரங்க விபத்தில் புதைந்த தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

News image

விபத்து நடந்த தாமிரச்சுரங்கத்தில் நடைபெற்று வரும் மீட்புப்பணி

Updated On :5 டிசம்பர் 2023, 4:35 pm IST

ஜாம்பியாவில் கடந்த வியாழக்கிழமை இரவு, சட்ட விரோதமாக நடைபெற்று வந்த தாமிரச்சுரங்கப் பணியில் விபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதைந்து போயினர். அனைவரும் இறந்துவிட்டார்கள் என்ற அனுமானத்தில் 4 நாள்களாக உடல்களை மீட்கும்பணி நடைபெற்று வந்த நிலையில், புதைந்த சுரங்கத்திலிருந்து குரல்கள் கேட்பதால் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என மீட்புப் பணியினர்  நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

Story image

சிங்கோலா பகுதியில் சட்ட விரோதமாக நடைபெற்று வந்த இந்தச் சுரங்கப் பணியின்போது கனமழை காரணமாக மணல் சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதைந்த சுரங்கத்திலிருந்து குரல்கள் கேட்பதால் உள்ளே சுரங்கத் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என நம்புவதாகவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்புப்பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

Story image

தொடர்ந்து பெய்துவரும் மழையால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் ஜாம்பியாவின் துணை ஜனாதிபதி முடாலே நலுமாங்கோ தெரிவித்துள்ளார். 

Story image

அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்பட்டு வந்த நிலையில், சில தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.