மெய்யான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சியே நம் இலக்கு: அண்ணாமலைதவெக அரசு இந்த ஆண்டு ரூ. 85 ஆயிரம் கோடி கடன் வாங்கப்போகிறது : அண்ணாமலைவீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

இந்தோனேசியாவில் தொடரும் எரிமலைச் சீற்றம்!

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.

News image
Updated On :6 டிசம்பர் 2023, 6:04 pm IST

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலையில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிகளவிலான எரிமலைச் சாம்பல் மற்றும் புகை வெளியாகி வருகிறது. 

எரிமலைச் சீற்றத்தில் சிக்கிய பெண்ணை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக, மராபி எரிமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் மாயமாகினர்.

படாங் தேடல் மற்றும் மீட்பு படையின் தலைவர் அப்துல் மாலிக் கூறுகையில், “26 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படாமல் இருந்துள்ளனர். அவர்களில் 14 பேரை கண்டுபிடித்துள்ளோம். அதில் 3 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பெரும் அளவிலான சாம்பல்கள் படிந்துள்ளன. சாலை மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளன.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்தனர். மராபி எரிமலையில் தொடர்ந்து புகை மற்றும் சாம்பல்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.