சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹமாஸை அழிக்கும்வரை போர் ஓயாது: இஸ்ரேல்

இஸ்ரேல் ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

News image
காயமுற்ற பாலஸ்தீனர் | AP
Updated On :12 டிசம்பர் 2023, 6:46 am

DIN

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களாகத் தொடர்ந்துவரும் நிலையில் இன்னும் நீடித்தாலும் அதற்கேற்ப தயாராககி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அக்.7 ஹமாஸ் இஸ்ரேலில் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர். 240 பேரை பிணைக்கைதிகளாகக் கடத்தி சென்றனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கி தரைவழி தாக்குதலாக விரிவுப்படுத்தியுள்ளது.

பலியான பாலஸ்தீனர் மற்றும் அவரது உறவினர்கள் | AP

பலியான பாலஸ்தீனர் மற்றும் அவரது உறவினர்கள் | AP

இதில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 17,700-ஐ கடந்துள்ளதாகவும் இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஸாவின் மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் இடப்பெயர்வுக்கு ஆளாகியிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

இவர்களுக்குத் தேவையான வாழ்வாதார உதவிகளைக் காஸாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் கெடுபிடிகள் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவிற்குள் நுழையும் பொருள்களைச் சோதனை செய்ய இரண்டாவது சோதனை சாவடியை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது.

அரசியல் பார்வையாளர்கள், இஸ்ரேல் காஸாவிலிருந்து ஒட்டுமொத்தமாக மக்களை வெளியேற்ற முனைவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.