

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்கு ரகசிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் 4 பேருக்கு ஈரானில் வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவா்களுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களுக்கும் அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, இஸேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் ஒருவருக்கு கடந்த 16-ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தங்களது நாடுகளை வேவு பாா்ப்பதாக இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாலஸ்தீன விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.