மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்படாது, கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாதவர்கள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் கரோனா கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது.
இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி
கடந்த ஆறு மாதங்களில் கரோனாவும் பாதிக்காமல், தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் இருந்தால், கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இதையொட்டி, அந்நாட்டைச் சேர்ந்த 18 - 29 வயதுடைய மக்கள் தங்களது 4வது தவணை தடுப்பூசியையும், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5வது தவணையையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
5 வயது முதல் 17 வயதுடைய சிறார்களில் ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் அவர்கள் மட்டும் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், மற்ற குழந்தைகள் யாருக்கும் கூடுதல் தவணை தடுப்பூசி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் 16 வயதுடையவர்களில் 72 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, அவர்களுக்கு இதுவரை மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும்.
இதையும் படிக்க.. பெற்றோரே.. கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்வோம்!
இன்னும் ஏன் தடுப்பூசி என்று கேட்பவர்களுக்கு.. உலகம் முழுவதும் கரோனா தொற்று இன்னமும் பரவிக்கொண்டுதானிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் மட்டும் 18,590 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் நாள் சராசரி 2,656 என்பதாகும்.
ஒருவேளை அறிகுறி தென்படும் அனைவருமே பரிசோதனை செய்து கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


