நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நேபாள விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இரண்டையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

News image
Updated On :16 ஜனவரி 2023, 11:13 am

DIN

ஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இரண்டையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

கருப்புப் பெட்டிகள் நேபாள விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் (CAAN) ஒப்படைக்கப்பட்டுள்ளன. காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் விமான தரவு ரெக்கார்டர் மூலம் கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை எடுக்க முடியும். மேலும், விபத்துக்கான காரணத்தையும் கருப்புப் பெட்டியைக் கொண்டு கண்டுபிடிக்க முடியும்.

நேபாள தலைநகர் காத்மண்டுலிருந்து 72 பேருடன் பொக்காரா சென்ற விமானம் நேற்று(ஜன.16) திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சேதி நதிப் பள்ளத்தாக்கில் விமானம் விழுந்து நொருங்கியதில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த ஐந்து இந்தியர்கள் அபிசேக் குஷ்வாஹா, பிஷால் சர்மா, அனில் குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக எட்டி ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.