பிலிப்பின்ஸின் தலைநகருக்கு அருகிலுள்ள ஏரியில் படகு கவிழ்ந்ததில் 30 பேர் பலியானதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பினன்ஹொன் நகரிலிருந்து ஏரி வழியாக தலிம் துவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்ட நிலையில், படகில் 70 பயணிகள் பயணித்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரே பக்கத்திற்கு வந்ததால் எடை அதிகரித்தது. இந்நிலையில் நிலை தடுமாறிய படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், படகில் பயணித்த அனைவரும் ஏரியில் மூழ்கினர். விபத்து குறித்து தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படகில் பயணித்த பயணிகள் யாரும் கவச உடை அணியவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். 30 பேர் பலியான நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.