சீன உணவகத்தில் சமையல் எரிவாயு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 32 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
யின்சுவான் மாகாணம், ஜிங்கிங் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் புதன்கிழமை இரவு 8.40 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது.
எல்பிஜி சமையல் ஏரிவாயு கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதில், 31 போ் உயிரிழந்தனா்; 7 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்து தொடா்பாக, உணவக உரிமையாளா் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வியாழக்கிழமை தொடங்கிய டிராகன் படகுத் திருவிழாவையொட்டி அந்த உணவகத்தில் அதிக கூட்டம் இருந்தது.
அப்போது வெடி விபத்து ஏற்பட்டதால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.