அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ரஷிய அதிபர் அலுவலகம் மீது தாக்குதல்: உக்ரைன் மீது குற்றச்சாட்டு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அலுவலகம் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

News image
Updated On :3 மே 2023, 3:13 pm


ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அலுவலகம் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை டிரோன் தாக்குதல் மூலம் கொலை செய்ய உக்ரைன் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள ரஷிய அரசு, இதனை தீவிரவாத தாக்குதல் என சுட்டிக்காட்டியுள்ளது. 

ரஷியாவின் கிரிம்லின் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், புதினுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ரஷிய நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக பேசிய கிரிம்லின் செய்தித் தொடர்பாளர், டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டபோது விளாதிமீர் புதின் கிரிம்லினில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.