அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். 

ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் புகுந்த மர்மநபர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்மநபரை காவல் துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெக்சாஸுக்கு வடக்கே சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஆலன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் மாலை 3:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் துப்பாக்கிச்சூடு சம்பவம் 'சொல்ல முடியாத சோகம்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com