மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். 

News image

கோப்புப்படம்

Updated On :7 மே 2023, 5:49 am

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். 

ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் புகுந்த மர்மநபர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மர்மநபரை காவல் துறையினர் சுட்டுக்கொன்ற நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உள்பட 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெக்சாஸுக்கு வடக்கே சுமார் 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஆலன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் மாலை 3:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் துப்பாக்கிச்சூடு சம்பவம் 'சொல்ல முடியாத சோகம்' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.