இந்தோனேசியாவின் திமோா் பிராந்தியத்தில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிராந்திய தலைநகா் குபாங்குக்கு 21 கி.மீ. வடக்கு-வடகிழக்கே 36.1 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் கட்டடங்கள் குலுங்கி மக்களிடையே பீதியை ஏற்படுத்தினாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.