ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வடக்கு காஸாவை முடக்கியது இஸ்ரேல்!

வடக்கு காஸா பகுதி இஸ்ரேல் ராணுவத்தால் மற்றைய பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

News image
காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம்
Updated On :7 நவம்பர் 2023, 9:04 am

DIN

இஸ்ரேலிய ராணுவம், காஸாவின் மற்ற பகுதிகளில் இருந்து வடக்கு காஸாவைத் துண்டித்தது. ஹமாஸுக்கும் ராணுவத்துக்கும் இடையில் போர் வலுக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

துண்டிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது முறையாக இணைய அலைபேசி தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளன.

காஸாவில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 10,000-த்தைக் கடந்திருப்பதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் உருவான 75 ஆண்டுக்காலத்தில், இந்தப் போர் இத்தனை குறுகிய காலத்தில் மிக அபாயகரமானதாக உருமாறியுள்ளது.

ஒரு மாதமாக நீடிக்கும் போரில் 32-வது நாளான இன்று (அக்.7) இஸ்ரேல், காஸாவில் மருத்துவமனை பயன்படுத்தும் சூரிய மின்சக்தி தகடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 

மருத்துவமனைகளில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்த நிலையில் சூரிய மின்சக்தி தகடுகள் மூலமாக மின்சாரம் பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் நோயாளிகளின் நிலையை இன்னும் மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்ததிற்கான தீர்மானம் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்தைப் பெற இயலாததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

அமெரிக்கா, மனிதத்துவ அடிப்படையில் தற்காலிக போர் இடைவெளி கோரியது. மற்ற நாடுகள் மனிதத்துவ போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.