காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

கடந்த 20 நாட்களில் துருக்கியிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய 3,000 புலம்பெயர்ந்தோர்!

கடந்த 20 நாட்களில் மட்டும் புலம்பெயர்ந்த 3,000 ஆப்கானிய மக்களை ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தியுள்ளது துருக்கி.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:50 am IST

கடந்த இருபது நாட்களில் துருக்கியிலிருந்து ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுல்லிற்கு இதுவரை 3,000 புலம்பெயர்ந்த மக்கள் திரும்பியுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை மொத்தம் 3090 பேர் விமானம் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 7 குடும்பங்களும் 7 குழந்தைகளும் அடங்குவர் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 36,996,000 ஆப்கானிய மக்களில், 3,083 பேருக்கு இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பான ஐஓஎம் (IOM) பொருளாதார ரீதியாக உதவ முன்வந்துள்ளது. இந்த அமைப்பு மூலம் 1402 பேர் மருத்துவ உதவிகளைப் பெற்றுள்ளதாகவும், 2,416 பேர் தொடர்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் காபுல் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தலிபான் தலைமையினான அகதிகள் விவகார அமைச்சகம் மற்றும் அகதிகள் இடம்பெயர்வுக்கானக் கூட்டு அமைச்சகம், அரசாங்க மாற்றத்தின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் சமீபமாக ஈரான், பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் புலம்பெயர்ந்த ஆப்கானிய மக்களை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் பணியை அதிகமாக்கியுள்ளன. 

மேலும் 6,000த்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் ஒரே நாளில் ஆப்கான் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் அகதிகள் அமைச்சகம் கடந்த நவம்பர் 11 அன்று வெளியிட்ட தகவலின்படி டோர்கம் மற்றும் போல்டக் கடக்கும் வழியாக இதுவரை 6,101 மக்கள் ஆப்கானுக்குத் திரும்பியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 

2021 ஆம் ஆண்டில் தாலிபானால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றபோது அங்கிருந்து பலர் வெளியேறினர். வெளியேறிய மக்களுக்கு மீள்குடியேற்றத் திட்டங்களை, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் ஏற்படுத்திக் கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலாவதியான பாகிஸ்தான் விசாக்களும், நீண்ட மீள்குடியேற்றச் செயல்முறைகளும் அவர்கள் நாடுகடத்தப்படக் காரணமாக அமைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.