‘நீதிமன்றங்களின் செல்லப்பிள்ளை’ என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விமர்சித்துள்ளார், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் சர்ஃபராஸ் அஹமத் புக்தி.
இம்ரான் கானுக்கு சிறையில் கிடைக்கிற வசதி என்பது வேறு எந்த பிரதமரோ சாமனியரோ கற்பனை செய்ய இயலாத ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான 71 வயதான இமரான் கான், சைபர் வழக்கில் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காக சிறையில் உள்ளார்.
உருது நாளிதழ் ஒன்றுக்கு உள்துறை அமைச்சர் அளித்த பேட்டியில், “இம்ரான் கானுக்கு அளிக்கப்படுகிற வசதிகள் சாமனியர்கள் கற்பனை செய்ய இயலாதது, என்ன இருந்தாலும், அவர் நீதிமன்றங்களின் டார்லிங் அல்லவா. கடுமையான நீதித்துறை சீர்திருந்தங்கள் நமக்கு தேவைப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.