நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

50 பத்திரிகையாளர்களைக் கொன்றது இஸ்ரேல்!: சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு

ஊடகப் பணியாளர்களைக் காக்கும்படியான வேண்டுகோளை மீறி பலரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:15 am

ஹாமாஸ் - இஸ்ரேலுக்கு இடையே நடந்துவரும் போரில் இதுவரை 50 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பான 'ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்' (Reporters Without Borders) குற்றம் சாட்டியுள்ளது. 

இதுவரை 70 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. "இஸ்ரேல் ஊடகப் பணியாளர்களை காக்கும்படியான வேண்டுகோளை மீறி பலரைக் கொன்றுள்ளது" என அந்த அமைப்பு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கடந்த நவ.22 அன்று பதிவிட்டிருந்தது. 

"இதுவரை 11 பத்திரிகையாளர்கள் பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர். சர்வதேச பத்திரிகை நிபுணர்கள் காஸாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பத்திரிகைத் துறையும் அழிக்கப்பட்டுவருகிறது" என சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பின் மத்திய கிழக்குப் பகுதிக்கு தலைமை வகிக்கும் ஜானதன் டேகர் தெரிவித்துள்ளார். 

மேலும், அங்குள்ள பத்திரிகையாளர்களைப் பாதுகாக்க சர்வதேச அமைப்புகள் முயற்சி எடுக்கவேண்டும் எனவும், உள்ளே இருக்கும் பத்திரிகையாளர்கள் வெளியேற ரஃபா எல்லை திறக்கப்பட வேண்டும் எனவும், காஸாவிற்குள் நுழைய சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். நவ.23 வரை 56 பத்திரிகையாளர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

பிரபல பத்திரிகையாளர் பிலால் ஜடல்லா இஸ்ரேலின் நேரடித் தாக்குதலுக்கு பலியானது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை பல ஊடகங்கள் கண்டித்துவருகின்றன. 2023ல் உலகளவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் மரணத்திற்கு இஸ்ரேல் பொறுப்பு வகிக்கிறது எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.