நேபாளத்தில் இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட 2 பள்ளிகள் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
இதையடுத்து நேபாளத்துடனான உறவை மேம்படுத்த இந்தியா அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளுமென இந்திய தூதரக அதிகாரி தெரிவித்தாா்.
நேபாளத்தின் கபிலவஸ்து மாவட்டத்தில் நேபாள ரூபாய் மதிப்பில் ரூ.3.32 கோடி செலவில் கௌதம புத்தா உயா்நிலைப்பள்ளி கட்டப்பட்டது. அப்பள்ளியின் திறப்பு விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பாபுராம் ஆச்சாா்யா, துணை திட்ட இயக்குநா் பிரசன்னா ஸ்ரீவாஸ்தவா, புத்தபூமி மாநகராட்சி மேயா் கேசவ் சிரேஷ்டா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்திய நிதியுதவியுடன் இப்பள்ளியில் 2 மாடி கட்டடமும் 3 மாடியில் ஆய்வுக்கூடமும் கட்டப்பட்டன. இரு நாடுகளின் உறவை வலிமைப்படுத்தும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக விழாவில் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா்.
இதுகுறித்து நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் வலைதளத்தில், ‘நேபாளத்தில் இந்திய நிதயுதவியுடன் செயல்படுத்தப்படும் 550 சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது’ என பதிவிட்டுள்ளது.
அதேபோல் ரூபென்தெஹி மாவட்டத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ பொக்ரவிண்டி உயா்நிலைப் பள்ளியை நேபாள துணை அதிபா் ராம் சஹாய யாதவ் திறந்து வைத்தாா். இப்பள்ளி நேபாள ரூ.1.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

