காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி

கருப்பு திரைப்படம் குறித்து ஆர். ஜே. பாலாஜி...

suriya, rj balaji

ஆர். ஜே. பாலாஜி, சூர்யா

Published On :

கருப்பு திரைப்படம் பக்கா கமர்சியலாக எடுக்கப்பட்டுள்ளதாக ஆர். ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகவுள்ள திரைப்படம் “கருப்பு”. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடிக்கும் இப்படத்தில் நடிகர்கள் த்ரிஷா, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படம் வரும் மே. 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி, “உலகமே கடினமான நிலைமையில் போராடிக்கொண்டிருக்கும் போது, ஒருவேளை சூப்பர்ஹீரோ வந்து இந்தத் துயரங்களைத் தீர்த்தால் எப்படி இருக்கும்? இப்படியான பின்னனியில் பக்கா கமர்சியல் பாணியில் தீயசக்திகளை முறியடித்து தெய்வீகத்தை நிலைநிறுத்தும் கதையாகவே கருப்பை உருவாக்கியிருக்கிறோம். இதில் நடிகர் சூர்யா சூப்பர்ஹீரோவாக இருந்து மக்களின் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறார்.

படத்தை எடிட் செய்யும்போது சூர்யா சாரின் கண்களும், திரை இருப்பும் பிரமாதமாக இருந்தைப் பார்த்தேன். ஒரு நட்சத்திர நடிகருக்கு அதுதான் அடையாளம். 10 பேர் உள்ள கூட்டத்திலும் சூர்யா தனியாகத் தெரிவார். ” எனக் கூறியுள்ளார்.

Summary

R.J. Balaji has stated that the film Karuppu has been made as a thoroughly commercial movie.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.