மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அமெரிக்கா:இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை முற்றுகையிட்ட காலிஸ்தான் ஆதரவாளா்கள்

அமெரிக்காவில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டு, நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:07 pm

DIN

அமெரிக்காவில் அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்துவை காலிஸ்தான் ஆதரவாளா்கள் முற்றுகையிட்டு, நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொல்லப்பட்டாா். இந்நிலையில், அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள குருத்வாராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, அந்நாட்டுக்கான இந்திய தூதா் தரண்ஜீத் சிங் சாந்து அண்மையில் சென்றாா்.

அங்கு அவரை காலிஸ்தான் ஆதரவாளா்கள் சிலா் முற்றுகையிட்டனா். நிஜ்ஜாரை இந்தியா கொலை செய்ததாக அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

பின்னா் நிஜ்ஜாரின் கொலைக்கும், சீக்கிய இளைஞா்கள் கொல்லப்படுவதற்கும் இந்திய தூதரகம்தான் காரணம் என்று அவா்கள் ஆத்திரத்துடன் கூச்சலிட்டனா். அங்கிருந்து சாந்து விலகிச் சென்றபோது, தங்கள் கேள்விகளுக்கு நீங்கள் (சாந்து) பதிலளிக்க மறுப்பது ஏன் என்று அவரிடம் உரக்கக் கேட்டனா். இதையடுத்து அவா்களை குருத்வாராவில் இருந்த சீக்கிய சமூகத்தினா் வெளியேற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.