வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தற்காலிக போர் நிறுத்தம்: 30 பாலஸ்தீனக் கைதிகளை விடுவித்தது இஸ்ரேல்!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் 30 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.

News image
Updated On :29 நவம்பர் 2023, 10:24 am

DIN

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 12 பிணைக்கைதிகளுக்கு நிகராக 30 பாலஸ்தீனக்கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இந்த கைதிகள் பறிமாற்றம் நடைபெற்றது. 

9 இஸ்ரேலியப் பெண்களும், ஒரு 17 வயது நிரம்பிய சிறுமியையும்,  தாய்லாந்தைச் சேர்ந்த இருவரையும் ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது. வரும் புதன்கிழமை வரை நீடிக்கும் இந்த போர் நிறுத்தத்தில் மேலும் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை ஹமாஸ் அமைப்பு 81 பிணைக்கைதிகளை விடுதலை செய்துள்ளது, இஸ்ரேல் 180 பாலஸ்தீனக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. நிரந்தர போர் நிறுத்தத்தில் துளியும் விருப்பம் கொள்ளாத இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒழித்துக்கட்டாமல் போரை நிறுத்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. 

இந்தப் போர் துவங்குவதற்குக் காரணமாக இருந்த ஹமாஸ் தாக்குதலில், மொத்தம் 240 பேர் பிடித்துவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.