
பிரிட்டனில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து சறுக்கி புல்வெளியில் பாய்ந்ததால் பரபரப்பு நிலவியது. விமானத்திலிருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
பிரிட்டன் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டின் பல பகுதிகளில் பாபேட் புயல் சூறையாடியுள்ளது. பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் நிலவும் கடும் புயல், கனமழை காரணமாக பிராட்ஃபோர்டு விமான நிலையத்தில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது சறுக்கியது.
ஓடுபாதையிலிருந்து விலகி புல்வெளி மைதானத்திற்குள் புகுந்தது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், உள்ளே இருந்த பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக வந்த மீட்புப் படையினர் விமானத்திலிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
கிரீஸ் நாட்டின் கோர்ஃபு தீவிலிருந்து பிரிட்டனுக்கு இந்த விமானம் வந்துள்ளது. இதில் 100 பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிராட்ஃபோர்டு விமான நிலையத்துக்கு வந்த விமானங்கள் வேறு பாதைக்கு மாற்றிவிடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.